ஆன்மிக தகவல்

ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்றார் ஒளவையார். என்னதான் வீட்டில் தனியாக பூஜை அறை அமைத்து தெய்வப் படங்களை வைத்து வழிபட்டாலும், கோயிலுக்குச் சென்று நம் பிரார்த்தனைகளை முறையிட்டு வழிபட்ட திருப்தி கிடைக்காது. ஆனால்,  இறைவன் குடிகொண்டிருக்கும் கோயிலுக்குச் சென்று வழிபடும்போது, அதற்கென உள்ள சில நியதிகளையும்  பின்பற்ற வேண்டும் என்கிறதாம் சாஸ்திரங்கள்.


கோயில்

அந்த நடைமுறைகளைத்தான் நமது முன்னோர்கள் காலம்காலமாகப் பின்பற்றி வருகிறார்கள். எனவே தெய்வ அருள் பூரணமாகக் பி.என்.பரசுராமன்கிடைக்க என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து விவரிக்கிறார் சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்.

செய்ய வேண்டியவை...

1.கோயிலுக்குச் செல்லும் முன்னர் குளித்து விட்டு தூய ஆடைகளை உடுத்திச் செல்ல வேண்டும்.

2.கோயில் அருகில் சென்றதும், கோயிலுக்கு முன்பாக நின்று கோபுரத்தை நோக்கி வணங்க வேண்டும்.

3.பசுமடம் உள்ள கோயிலுக்குச் சென்றால், வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை கொண்டு சென்று பசுவுக்குக் கொடுப்பது  சிறப்பு.

4.சிவன் கோயில் என்றால் 3, 5, 7 என எண்ணிக்கையில் வலம் வர வேண்டும்.

5.சிவன் கோயில் என்றால், நந்தி பகவானை வழிபட்ட பின்னரே, சிவபெருமானை வழிபட வேண்டும். அதேபோல நந்திக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் செல்லக் கூடாது.

சிவன்

6.விநாயகரை  இரு கைகளால், தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு வழிபட வேண்டும்.


7.கோயிலின் உள்ளே உள்ள மற்ற சந்நிதிகளைக் காட்டிலும், கொடி மரத்தின் அருகில் மட்டுமே விழுந்து கும்பிட வேண்டும்.


8.அந்தந்த சந்நிதிக்கு ஏற்ற ஸ்துதி பாடல்கள் பாடி வழிபடுவது சிறப்பு. மந்திரங்கள் மற்றும் துதி பாடல் தெரியாதவர்கள், அந்தச் சந்நிதியில் உள்ள கடவுளின் பெயரைச் சொல்லி ஓம் (சிவ) போற்றி என்று கூறலாம்.

9.கோயிலில் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்தது.

10.கோயிலில் விபூதியோ குங்குமமோ கொடுத்தால், அவற்றை வலது கையால் மட்டுமே வாங்க வேண்டும்.

11.கோயிலில் இருந்து திரும்பும்போதும் மீண்டும் கோபுர தரிசனம் செய்ய வேண்டும்.

12.கோயிலில் இருந்து நேராக நம் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.


செய்யக்கூடாதவை...

1. கோயிலின் பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்கக் கூடாது.

2.கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது.

3. கோயில் இறைவன் குடியிருக்கும் தலம் அங்கு கோயிலில் வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதலும் உரக்கப் பேசுவதலும் தவறு. இது  மற்றவர்களின் வழிபாட்டுக்கும் இடையூறாக அமையும்.

4. புனித இடமான கோயிலுக்குள் இருக்கும்போது, வெற்றிலை பாக்கு போடுதல், பொடிபோடுதல், சிகரெட் பிடித்தல் நிச்சயம் கூடாது.

5.விக்கிரகங்களைத் தொட்டு வணங்கக் கூடாது.  

6.கோயிலுக்குள் உறங்கக் கூடாது.

கோயில் சந்நிதி

7.கோயிலில் இருந்து வீட்டுக்குக் கிளம்புவதற்கு முன்பாக, கோயிலில் ஏதாவது ஓர் இடத்தில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பிறகுதான் செல்ல வேண்டும்.

8.பிறப்பு, இறப்பு தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது.

9.தலையில் தொப்பி, முண்டாசு அணிந்துகொண்டோ, ஈரத் துணி, அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது. தோளில் துண்டுடன் தரிசனம் செய்யக் கூடாது.

10.கோயிலுக்குச் சென்று வந்தபின் வீட்டில் உடனடியாகக்  கால்களைக்  கழுவக் கூடாது.

கோயில் வழிபாடு சிறப்பாக அமைய இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவோம்;  இறைவன் அருளை பூரணமாகப் பெறுவோம்.

I BUILT MY SITE FOR FREE USING